மக்கள் விரோதப் போக்கினை கடைபிடிப்பவர்கள் மக்களின் எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும் - துரை வைகோ

by Editor / 21-04-2022 05:58:40pm
மக்கள் விரோதப் போக்கினை கடைபிடிப்பவர்கள் மக்களின்  எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும் - துரை வைகோ

கோவில்பட்டியில் உள்ள யூனியன் கிளப்பில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் மத்தியில் தெரித்ததாவது:

தமிழக ஆளுநர் பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பாரபட்சமில்லாமல் தமிழக காவல்துறையினர் செய்திருந்தனர்.

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இது ஜனநாயக படுகொலை,
இச்செயல் தமிழக மக்களுக்கான விரோதப் போக்கினை ஆளுநர் கையாளுகிறார்.

ஆளுநர் தமிழக ஆளுநராக செயல்பட வேண்டும் பாஜக ஆளுநராக செயல்படக்கூடாது அதுதான் மதிமுகவின் கருத்து,மக்களுடைய எதிர்ப்பு கொந்தளிப்பின் வெளிப்பாடுதான் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்,
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம், வன்முறை கூடாது.

ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட பட்ட விவகாரம் தமிழக மக்களின் பிரதிபலிப்பாகவே நான் பார்க்கிறேன்

இலங்கையில் உள்ள அரசு போல் இங்கு மக்கள் விரோதப் போக்கினை கடைபிடித்தால் பாஜக தலைவர் அண்ணாமலை ஆக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் மோடி ஆக இருந்தாலும் எதிர்ப்பை சந்தித்தே ஆகவேண்டும்

திராவிடம் என்பது சமத்துவம், சமூக நீதி என்ற வாழ்வியல் முறை தான் திராவிடம், அண்ணாமலை நானும் ஒரு திராவிடன் என்று கூறியது எங்களுக்கு கிடைத்த வெற்றி

கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டு அது தரைகுறைவாக கொச்சைப்படுத்திய தாகும் வரம்பு மீறிய இருக்கக்கூடாது பாக்யராஜ் கூறிய கருத்தை நான் அவ்வாறு தான் பார்க்கிறேன்

கோடை காலங்களில் மின் தேவை என்பது அதிகமாக தேவைப்படுகிறது அது காலங்காலமாக நடைபெற்றுவரும் செயல். அதில் சவாலான பிரச்சினைகளும் உள்ளது, மின்துறை அமைச்சர் இது சம்பந்தமாக உரிய  விளக்கம் அளித்துள்ளார். அதன் காரணமாக கூட இருக்கலாம்


வரும் காலங்களில் தமிழகம் முழுவதும் மின் தட்டுப்பாடு வராது என்பதுதான் என் நிலைப்பாடு அதற்கான உற்பத்தியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே மின் தட்டுப்பாடு வராது என்பது தான் என்னுடைய கருத்து என்றார்.

 

Tags :

Share via