நடிகர் சூர்யா -இயக்குனர் பாலா மோதல் படப்பிடிப்பு நிறுத்தம்

by Admin / 04-05-2022 11:57:10pm
 நடிகர் சூர்யா -இயக்குனர் பாலா மோதல் படப்பிடிப்பு நிறுத்தம்


நடிகர் சூர்யா வளர்ந்து வந்த நேரத்தில் ,இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடித்த இரண்டு படங்கள்
அவருக்குத் திருப்பு முனையாக அமைந்தது.நந்தா ,சூர்யாவை ஓர் ஆக்ரோகோஷமானவராக-தவறு செய்தவனைஉடனே தண்டனை வழங்கும் கொடூர குணம் கொண்டோனாக ....பிதா மகனில் ஏமாற்று பேர்வழியாக .... வேறு...
வேறு கதை களத்தில் , தன் நடிப்பை வெளிப்படுத்தி ெஜாலித்தார்.சூர்யாவின் வளர்ச்சிக்கு பாலா போன்றோரின்
ஒத்துழைப்பு முதன்மையாகயிருந்தது.கிட்டதட்ட பதினெட்டு ஆண்டுகள்  கடந்து விட்டன.இந்நிலையில் சூர்யா
41 வது படத்தை  ,பாலா இயக்க ஒப்புக்கொண்டு படப்பிடிப்பும் 15நாள்கள் நடந்தன. நாகர் கோவில் சுற்று வட்டார
பகுதிகளில் வேகமாக வளர்கையில்,சூர்யா தான் அடுத்து நடிக்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அதிகற
கவனம் செலுத்த ஆரம்பித்தார்.தினமும் வாடிவாசல் படத்தில் நடிக்கயிருக்கும் காளையுடன் பயிற்ச்சியில் ஈடுபடுவது
பாலாவை எரிச்சல் படுத்தியிருக்கக்கூடும் .பாலா, பாலு மகேந்திராவிடம் உதவிஇயக்குனராகஇருந்து வந்தவர்.வெற்றி
மாறனும் பாலுமகேந்திராவின் உதவியாளரே..தன் படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தன் சூனியர் படத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவவம்தன் படத்திற்கு அளிக்கப்படாததால் பாலா கோபத்தில் இருந்ததாககோலிவுட் செய்தி. இது சூர்யா  பாலாவிடையே மோதலாக உருமாறியிருக்கிறது.சூா்யா படப்பிடிப்பு இடத்தில் பேக் அப் சொல்லிக்கிளம்பி விட்டதாக தகவல்..படம் பாதியிலே நின்று விடுமா  இல்லை  பேச்சு வார்த்தையின் மூலம் தொடருமா என்பது பொறுத்திருந்து பார்க்லாம்.

 

Tags :

Share via