காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு கொலை மிரட்டல் தீயணைப்பு வீரர் மீது வழக்கு

by Editor / 09-05-2022 08:11:20am
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு கொலை மிரட்டல்   தீயணைப்பு வீரர் மீது வழக்கு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரியார் தெருவை சேர்ந்தவர் ஆறு மங்கலம் மனைவி சிந்து (34) ஆறு மங்கலமும் சிந்துவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் திருமணம் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு  ஐந்து வயதில் ஒரு மகன் உள்ளான். ஆறுமுகமங்கலம் தற்போது சிவகாசியில் தீயணைப்பு துறையில் பணியாற்றி வருகிறார். ஆறு மங்கலம் சென்னையில் பணியாற்றியபோது அங்கு உள்ள பெண்ணிடம் தொடர்பு இருந்து வந்தது. இதனை சிந்து ஆறு மங்களத்தின் தாயார் மற்றும் தகப்பனிடம் கூறியும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் சிந்து தன் வீட்டில் இருக்கும்போது ஆறு மங்கலம், தனது மனைவி சிந்துக்கு பணம்,நகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.   இதுகுறித்து சிந்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் பேரில் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி, தீயணைப்பு துறை வீரர் ஆறு மங்கலம்,  அவரது தந்தை சஞ்சீவி, தாயார் அஞ்சலி மற்றும் பெண்  உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.

 

Tags : Case filed against firefighter for threatening to kill wife who fell in love and got married

Share via