தடையில்லா சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்

by Editor / 19-05-2022 12:32:06pm
தடையில்லா சான்று வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தடையில்லா சான்று வழங்க 5.000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை பெண் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பெட்டடிங் சுங்கம் பகுதியைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரின் புதிய வீட்டுக்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க தடையில்லா சான்று கோரி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தை அணுகி உள்ளார். நெடுஞ்சாலை பணிகள் ஆய்வாளர் நித்தியா ஏவலின் என்பவர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via