ஆர்டர்லி முறைக்கு எதிரான உத்தரவை அமல்படுத்த உத்தரவு.

by Editor / 18-11-2022 10:36:42pm
ஆர்டர்லி முறைக்கு எதிரான உத்தரவை அமல்படுத்த உத்தரவு.

ஆர்டர்லி முறையை ஒழித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்லி முறையை பின்பற்றுவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆர்டர்ல்லியாக பணியாற்ற மறுத்த காவலரை பணிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via