தீவிரவாதத்தை இஸ்லாமிய மனித உரிமை ஆணையம் வெளிப்படையாக ஆதரிக்கிறது.

by Staff / 28-05-2022 12:46:44pm
தீவிரவாதத்தை இஸ்லாமிய மனித உரிமை ஆணையம் வெளிப்படையாக ஆதரிக்கிறது.

தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் யாசின் மாலிக் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது மனித உரிமை மீறல் என கூறிய இஸ்லாமிய மனித உரிமை அமைப்புக்கு இந்தியா பதிலளித்துள்ளது. தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றும் யாசின் மாலிக் தண்டனை சரியானது எனவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குற்றத்திற்கான ஆவணங்கள் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்யப்பட்ட பின்னரே தீர்ப்பு அளிக்கப்பட்ட உள்ளதாகவும் மனித உரிமை அமைப்பு தீவிரவாதிகளுக்கு வெளிப்படையான ஆதரவு அளிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via