அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம்
அமெரிக்காவின் ஒக்லஹாமா மாகாணத்தில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த மர்ம நபர் சுற்றி இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். நகருக்கு அருகே நடைபெற்று வருடாந்திர நினைவு நாள் நிகழ்வில் 1,500 பேர் கலந்து கொண்டனர் இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான நிகழ்வின்போது புகுந்த மர்ம நபர் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 7 பேர் படுகாயமடைந்தனர் கடந்த 5 மாதங்களில் 640 குழந்தைகள் உள்பட 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் உயிரிழந்துள்ளனர்.
Tags :