இடி, மின்னல் தாக்கியதில் 25 ஆடுகள் உயிரிழப்பு
பென்னாகரம் அருகேயுள்ள பன்னிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜி- கோவிந்தம்மாள். இவர்கள் 35 வருடங்களாக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்று விட்டு பட்டியில் அடைத்து வைத்தனர்.
அப்போது திடீரென பெய்த கனமழை காரணமாக இடி, மின்னல் தாக்கி 25 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்தன. எனவே இதற்கு உரிய இழப்பீடு வழங்குமாறு தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒரே நேரத்தில் 25 ஆடுகள் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :