மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது

by Editor / 20-06-2022 08:28:55am
மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த சரக்கு ரயில் தடம் புரண்டது

மதுரை ரயில் நிலையத்திற்கு தூத்துக்குடியில் இருந்து வந்த சரக்கு ரயில் மூன்றாவது நடைமேடைக்கு வந்து கொண்டிருந்த போது திடீரென சரக்கு ரயிலின் மைய பகுதியில் உள்ள 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து திடீரென தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனைதொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளை மீட்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கபட்டது.இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

 

Tags : A freight train carrying tractors overturned at Madurai railway station

Share via