வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை கேரளா தம்பதி தூக்கிட்டு தற்கொலை

by Editor / 02-07-2022 09:47:58am
வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை  கேரளா தம்பதி  தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கேரளாவைச் சேர்ந்த சுகுமாரன் - சத்தியபாமா தம்பதியர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்திருப்பதாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் அந்த தனியார் விடுதி நோக்கி கேரள தம்பதியினரின் உறவினர்கள் அழுது கொண்டே வந்தனர். அப்போது விடுதியில் பணியாளர்கள் என்ன நடந்தது என்று கேட்டபோது, எங்கள் உறவினர்கள் விடுதியின் முன்பக்கம் புகைப்படம் எடுத்து பழனியில் இந்த விடுதியில் தங்கி இருப்பதாகவும், தாங்கள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் எங்களுக்கு தகவல்  அனுப்பி வைத்தனர் என்று கூறினர்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அறை உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார், பிரோத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.அதில் எங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. நாங்கள் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

 

Tags : Unable to pay the loan taken from the bank, Kerala couple hanged themselves

Share via