தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு 34 ரயில் சேவைகள் ரத்து

by Editor / 11-07-2022 03:28:04pm
தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு 34 ரயில் சேவைகள் ரத்து

தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் .அத்தியாவசிய மற்ற பயணங்களை தவிர்க்குமாறு பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறு பொது மக்களுக்குஅறிவுறுத்தப்பட்டுள்ளது .மூன்று நாட்கள் கல்வி நிறுவங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் கனமழை காரணமாக ஜூலை 11 முதல் 13 வரை 34 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via