நிலத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க லஞ்சம் - பொறியாளர் கைது

by Editor / 27-07-2022 12:35:13pm
 நிலத்திற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்க லஞ்சம் - பொறியாளர் கைது

கோயம்புத்தூர் அருகே  நிலத்திற்கு  தடையில்லாச்  சான்றிதழ் வழங்க வாங்கிய  லஞ்சம் பொதுப்பணித்துறை   உதவி பொறியாளர் லஞ்ச ஒழிப்பு  போலீசார்  கைது  செய்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த பிரபு என்பவர்  தனது நிலத்திற்கு டிடிசிபி தடையில்லா ஒப்புதல் சான்று வழங்க  கோரி பொள்ளாச்சி பொதுப்பணித் துறைக்கு உட்பட்ட நீர்வளத் துறை கண்காணிப்பு பொறியாளர்  அலுவலகத்தில் மனு  அளித்திருந்தார்.  இந்த நிலையில்  உதவி பொறியாளர் செந்தில்குமார்  இரண்டு லட்சம் ரூபாய்  லஞ்சமாக பெறும் போது சுற்றி வளைத்து கைது செய்தனர்.

 

Tags :

Share via