அதிமுக பொதுக்குழு வழக்கு உயர் நீதிமன்றம் விசாரிக்கும் உச்ச நீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இன்று விசாரித்த தலைமை நீதிபதி ரமணா சமரசம் செய்துகொள்ள தயாரா என இரு தரப்பும் கேள்வி எழுப்பினார் மேலும் பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் உள்ளது என்று வினாவினார் அதிமுக பொதுக்குழு தொடர்பாக உயர்நீதிமன்றம் அமர்வில் முடிவு எடுக்கும் என்றும் எனவே அங்கு செல்லுமாறு ஓபிஎஸ்-க்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது பொதுக்குழு தொடர்பான வழக்கு மூன்று வாரங்களுக்குள் முடிக்கவும் அதுவரை தற்போதைய நிலை தொடர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :