தமிழகத்தின் நீலகிரி கோவை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை

by Editor / 10-08-2022 03:07:21pm
தமிழகத்தின் நீலகிரி கோவை மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை


மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நீலகிரி கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தேனி திண்டுக்கல் திருப்பூர் தென்காசி திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வட தமிழக மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via