விளம்பரத்திற்காக வழக்கை ஏற்க முடியாது; உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்.

by Editor / 03-09-2022 11:09:31pm
விளம்பரத்திற்காக வழக்கை ஏற்க முடியாது; உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டம்.

உச்சநீதிமன்றத்தில் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி ஓய்வு பெற்ற IAS அதிகாரி கே.ஜி.வன்சுரா பொது நல மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’எத்தனை நகரங்களில் சமஸ்கிருதம் பேசப்படுகிறது? நீங்கள் அந்த மொழியை பேசுவீர்களா? இந்த மனுவை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க முடியுமா? விளம்பரத்திற்காக இது போன்ற வழக்கை தாக்கல் செய்ய வேண்டாம் எனக் கூறி தள்ளுபடி செய்தனர்.

 

Tags :

Share via