இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து 2 பேர் பலி

by Editor / 11-09-2022 01:51:27pm
இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து 2 பேர் பலி

 தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சுந்தரவேலபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆசிக் மாரிச்செல்வம் ஆகிய 3 பேர் இருசக்கர வாகனத்தில்முத்தையாபுறத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திருச்செந்தூர் சாலையில் சத்ய நகர் மேம்பாலத்தில் சென்ற போது நிலை தடுமாறி வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதி சாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேர் மீதும் அவ்வழியாக நாசரேத் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. விக்னேஷ்  ஆசிக் ஆகிய 2 பேர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த மாரிச்செல்வம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via