அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் 21ஆண்டு நினைவு தினம் பொது மக்கள் அஞ்சலி

by Editor / 12-09-2022 01:14:53pm
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் 21ஆண்டு நினைவு தினம் பொது மக்கள் அஞ்சலி

அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர். அத்துடன், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சிலிவேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர்.

இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அமெரிக்காஇரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை கொண்டு மோதி தகர்த்தனர்.வில் அனுசரிக்கப்பட்டது. 

பெண்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சிலிவேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். இந்த தாக்குதலின் நினைவாக நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது கணவர் டன் எம்காப்புடன் மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via