தஞ்சையில் சிறுவனை தாக்கிய இரண்டு பேர் கைது

by Staff / 27-09-2022 04:45:42pm
தஞ்சையில் சிறுவனை தாக்கிய இரண்டு பேர் கைது

தஞ்சையில் சிறுவனை தாக்கிய இரண்டு பேர் கைது தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர் அந்த பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரை பாரதிதாசன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் கரன் மற்றும் விளார் தில்லை நகரை சேர்ந்த லோகநாதன் மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் திடீரென தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறுவன் செய்த புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் சிறுவனை தாக்கியதற்கான காரணம் குறித்து அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via