ரூ. 75 லட்சம் யாருக்கு சொந்தம்..? 3 பேர் மீது வழக்கு பதிவு.

by Editor / 15-10-2022 09:54:43pm
 ரூ. 75 லட்சம் யாருக்கு சொந்தம்..?   3 பேர் மீது வழக்கு பதிவு.


திருவாரூர்-தஞ்சாவூர்  சாலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் உதவி போட்ட பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது. இந்த அலுவலகங்களில் 14 ஆம் தேதி  இரவு லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி நந்தகுமார் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரு அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ 75 லட்சம் ரொக்கப் பணம் சிக்கியது. இந்த பணத்திற்கு யாரும் உரிமை கோராததால் இதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் கோட்ட பொறியாளர் இளம்வழுதி  உதவி கோட்ட பொறியாளர் மாரிமுத்து  இளநிலை பொறியாளர் குமார செல்வன் ஆகியோர்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

 

Tags :

Share via