தேர்தல் நடைபெறுவது மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி

by Staff / 17-10-2022 05:17:26pm
தேர்தல் நடைபெறுவது மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி

அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், சென்னை சத்திய மூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:- நான் தலைவராக இருக்கும்போது இந்த தேர்தல் நடைபெறுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மிகப்பெரிய ஜனநாயக கடமையை ஆற்றி இருக்கின்றோம். 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றேன். நான் 2-வது முறையாக வாக்களிக்கின்றேன். எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via