மனநலம் பாதிக்கப்பட்ட மகனை எரித்துக் கொன்ற முதியவர் கைது

by Staff / 20-10-2022 01:16:51pm
மனநலம் பாதிக்கப்பட்ட மகனை எரித்துக் கொன்ற முதியவர் கைது

கேரள மாநிலம் கேச்சேரியை சேர்ந்த சுலைமானின் மகன் சகத் (வயது 28) மனநலம் குன்றியவர். நேற்று (அக்டோபர் 19) வீட்டிலிருந்த சுலைமான், சகத் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கிய சகத், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். கைது செய்யப்பட்ட சுலைமான், மகன் படும் துயரத்தை பார்க்க முடியாமல் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via