இராசராச சோழனின் பிறந்த நாள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 3 ஆம் தேதி அரசு விடுமுறை.

by Staff / 27-10-2022 03:30:33pm
 இராசராச சோழனின் பிறந்த நாள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 3 ஆம் தேதி அரசு விடுமுறை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 3 ஆம் தேதி மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாள் அன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 1037வது ஆண்டு சதயவிழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.நவம்பர் 3 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக 12.11.2022 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் வழக்கம் போல வேலை நாளாக இருக்கும். தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் . இது குறித்த அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் ,உள்ளூர் விடுமுறை தினத்தின்  திட்டமிட்ட அரசு தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் .

 

Tags :

Share via