திமுக அரசை கண்டித்து சசிகலா புஷ்பாஆர்ப்பாட்டம்
சசிகலா புஷ்பா எம்பியாக நியமனம் செய்யபட்ட போது, அவருக்கு டில்லியில் தங்குவதற்க்கு மத்திய அரசால் வீடு ஒதுக்கீடு செய்ய பட்டது. அவரது பதவிகாலம் முடிவடைந்து 2 வருடம் ஆகியும் இதுவரையில் அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது குடியிருப்பை முறையாக காலி செய்யும் படி அரசு அவருக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவரை அரசு குடியிருப்பை காலி செய்யாததால் அவரது வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைத்து விட்டு அவரது குடியிருப்பிற்க்கு அரசு அதிகாரிகள் சீல் வைத்தனர்.இன்று அவர் தென்காசியில் திமுக அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :