நரேந்திர மோடி உண்மையான தேசபக்தர் புகழந்த புடின்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை உண்மையான தேசபக்தர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் புடின் பாராட்டினார். வல்தாய் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது புட்டின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்ட உலகத் தலைவர்களில் மோடியும் ஒருவர். வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் அவர் தனது சொந்த மக்கள் மற்றும் நாட்டின் நலன்களால் தூண்டப்பட்டுள்ளார் என்று கூறினார்.
இந்தியா போன்ற நாடுகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் மட்டுமின்றி, வரும் நாட்களில் உலக அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்று புடின் கூறினார். இந்தியாவுடன் ரஷ்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துள்ளன. எதிர்காலத்திலும் இதே நிலைதான் இருக்கும் என்று புடின் மேலும் கூறினார்.
இந்திய விவசாயத் துறைக்கு முக்கியமான இரசாயன உரங்களின் இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தார். ரஷ்யா உடனடியாக உர இறக்குமதியை 7.6 மடங்கு அதிகரித்தது. பிரிட்டிஷ் காலனியில் இருந்து நவீன நாடாக இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது. உலகில் உள்ள அனைவரின் மதிப்பையும் இந்தியா பெறுகிறது என்று புடின் கூறினார்.
Tags :