இலவச சேவை எண் அறிவிப்பு மனநல பிரச்சனைக்கு. ..அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மனநல பிரச்சனைகளால் அவதிப்படுவோர் பயன்பெறும் வகையில் இலவச சேவை எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் "நட்புடன் உங்களோடு மனநல சேவை திட்டத்தை" மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் 14416 என்ற இலவச எண் தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
இந்த ஆலோசனை மையமானது அரசின் பிற சேவைகள் துறையுடன் இணைந்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படும். 104 இலவச எண் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற சுகாதாரத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு சேவை சார்ந்த இலவச எண்கள் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வு காலத்தில் பாதிக்கப்பட்ட மன அழுத்தத்திற்கு உள்ளான மாணவர்கள் சுமார் 2 லட்சம் பேர் வரை தொடர்புகொண்டு நிவாரணம் பெற்றுள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Tags :