ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வானவர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 25-09-2021 04:09:49pm
ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வானவர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


இந்தியக் குடிமைப் பணிக்கு (ஐ.ஏ.எஸ்.) தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்தியக் குடிமைப் பணிக்குத் தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள அனைவருக்கும் எனது பாராட்டுகள்; சிறப்பாகப் பணியாற்றிட வாழ்த்துகள்.
கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ரஞ்சித் தேர்வு பெற்றதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.
தேர்ச்சி பெறாதோர் துவளவேண்டாம். முயற்சி திருவினையாக்கும் என்று நம்பி உழையுங்கள்.
வரும் ஆண்டுகளில், தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். அதற்குண்டான ஆதரவையும் உரிய பயிற்சியையும் நமது அரசு வழங்கும் என்ற உறுதியை இத்தருணத்தில் அளிக்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via