செல்ல நாய்க்கு உணவு வைக்காத செல்ல தம்பியை கொன்ற அண்ணன்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் ஹக்கீம் (27). இவருக்கு ஹர்ஷத் என்ற சகோதரர் ஒருவரும் உள்ளார். ஹக்கீம் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். சமீபத்தில் வெளியூர் சென்ற ஹக்கீம் தனது தம்பி ஹர்ஷத்திடம் நாய்க்கு உணவு வைக்க சொல்லிவிட்டு சென்றுள்ளார். ஹக்கீம் பேச்சை கேட்காமல் ஹர்ஷத் நாய்க்கு உணவு வைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், வெளியூர் பயணம் முடிந்து வீடு திரும்பிய ஹக்கீம் ஆத்திரத்துடன் தனது தம்பியை தாக்கியுள்ளார். பெல்ட் மற்றும் கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு தாக்கியதால் ஹர்ஷத்திற்கு எலும்புகள் உடைந்ததுடன், உள்காயங்களும் ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹக்கீம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
Tags :