சர்ச்சையாகும் பிரகாஷ் ராஜ் ட்வீட்
விக்ரம் லேண்டரால் நிலவில் எடுத்த முதல் புகைப்படம் என கார்டூன் ஒன்றை நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு நபர் டீ போடுவது போன்ற கார்ட்டூன் படத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் பதிவிட்டு, நிலவில் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இது தான் என குறிப்பிட்டுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த செயல் இஸ்ரோ விஞ்ஞானிகளையும், நாட்டு மக்களையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக சர்ச்சையை கிளப்பி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Tags :