மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்: ராகுல்

by Editor / 25-06-2021 09:58:41am
 மோடி நாடகமாடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்: ராகுல்

டாய்கத்தான்-2021 போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக நேற்று கலந்துரையாடினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் ''சர்வதேச பொம்மை சந்தை சுமார் 100 பில்லியன் டாலர் அளவில் இருக்கிறது.ஆனால் இதில் இந்தியா வெறும் 1.5 சதவீதத்தைப் பெற்றிருக்கிறது. சுமார் 80% பொம்மைகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. நாட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் விரயமாகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும்'' என பேசினார்.இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
'நாட்டில் குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் துறையினர் வேலை இல்லாத நிலையை சந்தித்து வருகின்றனர். பிரதமர், இந்தியாவின் தற்காலத்தில் நாடகமாடி கவனத்தை திசை திருப்புகிறார். அவர் எதிர்காலத்துடன் விளையாடுகிறார்' என கூறி உள்ளார்.

 

Tags :

Share via