தூத்துக்குடி-ஏஎஸ்பி கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்.
தமிழக காவல்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பணிந்த்ர ரெட்டி உத்தரவிட்டார்.காவல்துறை நிர்வாக அலுவலக கூடுதல் தலைமை இயக்குனராக பணியாற்றி வந்த சங்கர் சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தலைமை இடத்தில் கூடுதல் காவல் துறை இயக்குனர் வெங்கட்ராமன் காவல்துறை இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் ஜெயராம் ஆயுதப்படை பிரிவுக்கு கூடுதல் தலைமை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு போலீஸ் பயிற்சி கல்லூரி தலைவர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
தூத்துக்குடி ஊரகப்பகுதி உதவி காவல் கண்காணிப்பாளர் சந்திப்பு கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டவர். இவர் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் கோவை மாநகர வடக்குப்பதி பகுதி காவல் துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் கோவையில் துணை ஆணையராக பணியாற்றி வந்த மதிவாணன் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த அசோக்குமார் சென்னையில் உள்ள சைபர் கிரைம் பிரிவின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பகுதி கண்காணிப்பாளராக இருந்த செல்வகுமார் தமிழ்நாடு கமாண்டோ போர்ஸ் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கமாண்டோ போர்ஸ் கண்காணிப்பாளராக இருந்த ராமர் கடலோர பகுதி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags :