காதலியின் சகோதரன் தந்தையை குத்திய கொலை செய்த காதலன்

by Staff / 01-12-2022 11:34:20am
காதலியின் சகோதரன் தந்தையை குத்திய கொலை செய்த காதலன்

ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தின் ரன்சோல் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தனு என்கிற பீரன் சமல். இவர் தனது காதலியின் சகோதரன்பாம்பிலோ கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர மகாபத்ராவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். சமல் தனது காதலியின் சகோதரர் ஜிதேந்திராவை சந்தைப் பகுதியில் வைத்து சரமாரியாக குத்தி வீழ்த்தினார். மகனின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தந்தை சந்தோஷ் காப்பாற்ற வந்த நிலையில், அவரையும் சமல் குத்தியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடைக்காரர்கள் மற்றும் சந்தையில் இருந்த உள்ளூர்வாசிகள் குற்றவாளியைத் தாக்கி அவரைப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தனர். போலீசார் காயமடைந்த இருவரையும் மீட்டு சுகிந்தா சமூக நல மையத்திற்கு கொண்டு சென்றனர், அங்கு ஜிதேந்திரா இரவு உயிரிழந்தார். பின்னர், சந்தோஷின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட ஜிதேந்திராவின் சகோதரியுடன் சமல் உறவு வைத்திருந்தார். ஆனால், சமலுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால், அவரது ஜிதேந்திராவும், தந்தையும் எதிர்ப்பு தெரிவித்தனர். பழிவாங்கும் வகையில், சமல், கூரிய ஆயுதத்தால், காதலியின் தந்தை மற்றும் சகோதரரை கடுமையாக தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் குற்றவாளியின் வீட்டை இடித்து அவரது லாரிக்கு புதன்கிழமை தீ வைத்தனர். பின்னர், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி தாரிணி சாக் அருகே தர்ணா நடத்தினர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிதேந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Tags :

Share via