இடுப்பு வலியால் தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 04-01-2023 02:56:44pm
 இடுப்பு வலியால் தூக்கு போட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே பிள்ளைகளத்தூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 60). இவரது மகன் கணபதி(31). இவர் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார்.இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கணபதிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் தினமும் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால், கணபதி விரக்தியில் இருந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கணபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via