பிரியாணி சாப்பிட்டு மாணவி உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது.
கேரளமாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் பெரும்பாலா பகுதியை சேர்ந்த அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற இளம்பெண் உள்ளூர் ஓட்டலில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து குழிமந்தி என்ற பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு கர்நாடக மாநிலம் மங்களூரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த டிச.,31ல் உயிரிழந்தார்.இது தொடர்பாக, அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அந்தஇளம்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து கேரள மாநிலம் காசர்கோடு அருகே பிரியாணி சாப்பிட்டு உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் இது குறித்து விசாரணை நடத்திட கேரள மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.இதன் தொடர்ச்சியாக இன்று ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றது.
Tags :