மதத்தை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.-அமைச்சர் மனோ தங்கராஜ்

by Editor / 22-01-2023 07:59:31am
மதத்தை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.-அமைச்சர் மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அ. தி. மு. க. விற்கு தலைமை , கொள்கை மற்றும் கோட்பாடுகள் இல்லை. அ. தி. மு. க. கட்சி ஓட்டை விழுந்து கடலில் தத்களிக்கும் படகு. அ. தி. மு. க. ஒன்றுபட்டு நின்றாலும் ஈரோடு இடைத்தேர்தலில் தி. மு. ககூட்டணி வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை , ஒரு இயக்கத்திற்கு வலுவான தலைமை இல்லையென்றால் அது மேய்ப்பான் இல்லாத ஆட்டு மந்தை போன்றது. மந்தையை விட்டு ஒவ்வொன்றாக வெளியேறி கொண்டு இருக்கிறார்கள். ஹிட்லர் , முசோலினி போன்றவர்களும் ஆட்சியை பிடித்துள்ளார்கள். அதே போன்று தான் தேசிய அளவில் பா. ஜனதா வெற்றி பெற்றுள்ளதை பார்க்க முடியும். பா. ஜனதாவின் மாநில தலைவர் அண்ணாமலை , யாத்திரை என்ற பெயரில் நன்றாக ஊர் சுற்றட்டும். இவரது யாத்திரை தேவையில்லாத ஒன்று என்பது மக்களுக்கே தெரியும். மதத்தை சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via