படிக்க ஆர்வமில்லாத பள்ளி மாணவர் தற்கொலை

by Staff / 25-01-2023 04:49:05pm
 படிக்க ஆர்வமில்லாத பள்ளி மாணவர் தற்கொலை

திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள முனியாண்டி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி இவரது மகன் வாசு 17 இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.படிப்பில் ஆர்வமில்லாததால் பள்ளிக்கு செல்லவில்லை என வாசு பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பெற்றோர் அவரை படிக்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இதனால் விரக்தி அடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்தார். பழனி அளித்த புகாரின் பேரில் இறந்த வாசுவின் உடலை மீட்ட திருப்பரங்குன்றம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via