கிளியிடம் போலீசார் விசாரணை

by Staff / 27-01-2023 01:16:07pm
கிளியிடம் போலீசார் விசாரணை

பீகாரின் கயாவில், மதுபான மாஃபியாவைச் சேர்ந்த ஒருவர் வளர்க்கும் கிளியிடம் அதன் உரிமையாளர் இருக்கும் இடத்தைப் பற்றிய துப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் கிளி அவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. விசாரணையின் வீடியோ வைரலாகி வருகிறது. இச்சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடியதால், போலீசாரிடம ஒரு கிளி மட்டும் சிக்கியது. எஸ்எஸ்ஐ கன்ஹையா குமார் கிளியிடம் விசாரித்தபோது, ​​'கடோரா கடோரா கடோரா' என்று மட்டும் கூறியது.

 

Tags :

Share via