பிரபாகரன் நலமுடன் உள்ளார்: பழ. நெடுமாறன் பரபரப்பு பேட்டி
பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பற்றிய அவதூறுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அவரைப் பற்றிய உண்மையை கூற இருக்கிறேன். பிரபாகரன் மிக்க நலமுடன் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் நான் தொடர்பில் இருந்து வருகிறேன். பிரபாகரனின் அனுமதியுடன் இதனை வெளிபடுத்துகிறேன். அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலை இப்போது தெரிவிக்க முடியாது. அவர் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்று கூறியுள்ளார்.
Tags :