பாலிவுட் நடிகருக்கு தடை

by Staff / 03-03-2023 11:30:11am
பாலிவுட் நடிகருக்கு தடை

பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்சிக்கு பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டாளர் செபி தடை விதித்துள்ளது. யூடியூப் சேனல்களில் வீடியோக்களை வெளியிட்டு முதலீட்டாளர்கள் மீது செல்வாக்கு செலுத்தி 2 நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதாக அர்ஷத் வார்சி மற்றும் 44 பேர் மீது செபி வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் அவரது மனைவி மரியா கோரெட்டியும் அடக்கம். இந்த வீடியோக்கள் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக ரூ.54 கோடி சம்பாதித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via