எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ரத்து

by Staff / 09-03-2023 11:50:53am
 எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் ரத்து

ஆந்திராவின் குண்டூர் - தெலங்கானாவின் காச்சிகுடா இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பத்து நாட்களுக்கு நிறுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த ரயில் இன்று முதல் 19ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பெத்தான்சரலா, ரங்காபுரம், மல்காபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதை பயணிகள் கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவை மிக முக்கியமான ரயில்களில் இதுவும் ஒன்றாகும்.

 

Tags :

Share via

More stories