இரண்டு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை
நாமக்கல் அருகே அமைந்துள்ள மோகனூர் பேரூராட்சி காக்கா தோப்பு புது தெருவைச் சேர்ந்த கோபி, குணவதி தம்பதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கோபி தனது மாமனார் கேசவனுடன் டீக்கடை நடத்திவருகிறார். இந்நிலையில் நேற்று இரவு குணவதிக்கம், அவரது தந்தை கேசவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த குணவதி, இரண்டு மகன்களையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :