நகை திருடிய இரண்டு பெண்கள் கைது

by Staff / 06-04-2023 11:59:55am
நகை திருடிய இரண்டு பெண்கள் கைது

ராமநாதபுரம்: பரமக்குடியில் சாந்தாராம் என்பவர் நகை அடமானம் பெற்றுக்கொண்டு பணம் கொடுத்து வந்துள்ளார். குமரகுடியைச் சேர்ந்த நாகநந்தினி, சாந்தாராமிடம் அடகு வைத்து எழுபதாயிரம் கடனாக பெற்றுள்ளார். பணத்தை சாந்தாராம் நந்தினியிடம் கேட்டுள்ளார். நேரில் வந்து தருகிறேன் என்று கூறி, வசந்தி என்பவரை கூட்டிக்கொண்டு சாந்தாராமின் வீட்டிற்கு சென்றுள்ளார். தனியாக இருந்த சாந்தாராமை, இருவரும் மயக்கமடைய செய்து பீரோவிலிருந்த 50 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றுள்ளனர். சாந்தாராமின், மகள் வந்து பார்த்தபோது 50 பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது. சாந்தாராமின் புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via