மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் விசைப்படகுகள் மீன்பிடிக்க இரண்டு மாதங்களுக்கு செல்லாது. தமிழ்நாட்டில், சென்னையிலிருந்து தெற்கே கன்னியாகுமரி உள்ள கடல் மீனவ கிராமங்கள் உள்ள மீனவர்கள் இரண்டு மாதங்களுக்கு மீன்பிடி தடைக்காலம் தொடங்குகிறது .மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தடைக்காலம் இன்று இரவு முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மத்திய மீன்வளத்துறை இரண்டு மாதங்களை மீன்பிடி தடைக் காலமாக அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன் காரணமாக விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் சென்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது . சாதாரண நாட்டு படகு, வல்லம் கொண்டு மீன் பிடிப்பதற்கு எந்த தடையும் கிடையாது .இந்த மீன் பிடி தடைக்காலத்தை தொடர்ந்து மீன்களின் விலை அதிகரிக்கும்.
Tags :