தாதா சகோதரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு.

by Editor / 16-04-2023 09:19:05am
தாதா சகோதரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரக்யாராஜ் நகரில் 144 தடை உத்தரவு.

உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடி அதிக் அஹமது மகன் ஆசாத் அஹமது கடந்த 13ம் தேதி பிரக்யாராஜ் நகரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். நேற்று ஆசாத் இறுதி சடங்கு நடந்தது;நேற்று ஆசாத் இறுதி சடங்கு நடந்தது; இந்நிலையில் இரவு போலீஸ் காவலில் இருந்த பிரபல தாதாவும், சமாஜ்வாடி கட்சியின் சார்பில் 5 முறை எம்.பி்யாக இருந்தவருமான அதிக் அகமது மருத்துவ பரிசோதனைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வந்தபோது ஊடகத்தினரிடம் பேட்டி வழங்கிக் கொண்டிருந்த நிலையில் 3 பேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார், இச்சம்பவத்தின் போது அதிக் அகமதுவின் சகோதரரும் உயிரிழந்தார்.

அப்போது இருவர் மீதும் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்; துப்பாக்கியால் சுட்டதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.அதிக் அஹமது, அஷ்ரப் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, இருவரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரக்யாராஜ் நகர் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் போது ஏ.என்.ஐ., பத்திரிக்கையாளர் ஒருவரும், போலீசாரும் காயம் அடைந்தனர். பத்திரிகையாளர்களாக வந்த கொலையாளிகள்.நடந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில் அதிக் அஹமது, அஷ்ரப்பை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து வந்தோம்.அப்போது பத்திரிகையாளர்களுடன் சிலர் வந்திருந்தனர். அவர்கள் தான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்தியுள்ளனர் என்றார்.

 

Tags :

Share via