ஏ. டி. எம். கொள்ளையில் மேலும் ஒருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ. டி. எம். மையங்களில் மர்ம நபர்கள் கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் பணம் எடுக்கும் எந்திரங்களை வெட்டி அதில் இருந்த ரூ. 72 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய அரியானாவை சேர்ந்த தஸ்லிம்கான் (வயது 35) என்பவரை கைது செய்தனர். இவர் கொள்ளையர்கள் ஏ. டி. எம். மையங்களில் கொள்ளையடிக்க சென்ற போது அவர்கள் பயன்படுத்திய காரை ஓட்டியவர் என்று கூறப்படுகிறது.
Tags :