வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பிய காவலர் பணியிடை நீக்கம்

by Editor / 04-08-2023 11:04:20pm
வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பிய காவலர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நல்லான்பிள்ளைபெற்றால் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரியும் சிவசங்கரன் என்பவர், வாட்சப் குழுவில் என்.எல்.சி வன்முறை தொடர்பாக வழக்கறிஞர்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசி ஆடியோ அனுப்பியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவலர் மீது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் புகார் அளித்த நிலையில், முதல்நிலை காவலர் சிவசங்கரனை இன்று பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷசாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via