தமிழகத்தில் சுட்டெரித்த வெயில் - பற்றி எரிந்த பைக்

by Staff / 17-04-2023 04:24:56pm
தமிழகத்தில் சுட்டெரித்த வெயில் - பற்றி எரிந்த பைக்

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மணிமேடையில் இருந்து எஸ்பி அலுவலகம் செல்லும் சாலையில் மோகன் என்பவர் பைக்கை நிறுத்திவிட்டு சென்றார். ஆனால் இன்று காலை கொளுத்திய வெயிலின் தாக்கத்தால் பைக் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது , உடனடியாக இதனை பார்த்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பைக்கில் பற்றி எறிந்த தீயை அணைத்தனர்.

 

Tags :

Share via