சிறுமிக்கு திருமணம்: தாய் உள்பட 2 பேர் கைது
ஈரோடு, கருங்கல்பாளை யத்தை சேர்ந்தவர் சக்திவேல், 24; ஒர்க் ஷாப் தொழிலாளி; ஈரோட்டை சேர்ந்த ஜோதி, 40, என்ற பெண், தனது, 16 வயது மகளை, கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்து பவானி ஊர்நல அலுவலர் இந் திரா கொடுத்த புகாரின்படி, குழந்தை திருமண தடுப்பு சட்டத்தில், சிறுமியின் தாயார் மற்றும் சக்திவேலை, கோபி அனைத்து மகளிர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Tags :