மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

by Staff / 30-04-2023 03:06:19pm
மனைவியை அடித்துக் கொன்ற கணவன் கைது

திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த கரடிபுத்தூர் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தர்மய்யா(24), தனது மனைவி லட்சுமி(22) மற்றும் மூன்று வயது மகனுடன் மாந்தோப்பில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த 23ஆம் தேதியன்று கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் தர்மய்யா, லட்சுமியை அடித்துக்கொலை செய்துவிட்டு, தலைமறைவானார். இவரைத் தேடி வந்த பாதிரிவேடு போலீசார் 8 நாட்களுக்கு பிறகு ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் புட்டிரெட்டி கண்டிகையில் நேற்று இரவு கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via