சாலை விபத்து.. 11 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் பலோட் மாவட்டத்தில் பொலிரோ வாகனம் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் பயணித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. புரூர் சௌகி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்தது. தகவல் கிடைத்ததும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :