சரத் பவாரை நேரில் சந்திக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்
தேசிய தலைநகர் டெல்லியில் ஆட்சி நிர்வாக பணிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று என்சிபி தலைவர் சரத் பவாரை சந்திக்கிறார். இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த பயணத்தின் போது, முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சஞ்சய் சிங், ராகவ் சதா மற்றும் டெல்லி அமைச்சர் அதிஷி ஆகியோரும் கலந்துகொள்வார்கள்.
Tags :